Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயக்கம்: வித்தியாசமாக குரலில் கத்துவதால் பதட்டம்

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (13:51 IST)
ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயக்கம்
ஆந்திர மாநிலத்தில் திடீரென கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து அடுத்தடுத்து 200 பேருக்கும் ஒரே பகுதியில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். இப்போது வரை அந்த பகுதியில் சுமார் 200 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாகவும் மயக்கமடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் மயங்கி விழுந்த மக்களின் வாயில் இருந்து நுரை வெளியேறி வருவதாகவும் அவர்கள் அவ்வப்போது வாந்தி எடுத்து வருவதுடன் வித்தியாசமான குரலில் கத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆந்திராவில் அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மர்ம செயலால் அந்த பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments