Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. 200 ரயில்கள் இலக்கு! – ரயில்வே ப்ளான்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (09:29 IST)
சமீபத்தில் அமர்ந்து செல்லும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து படுக்கை வசதி கொண்ட ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் இந்த வந்தே பாரத் ரயில்கள் அமர்ந்தபடி செல்லும் இருக்கை வசதி கொண்டவை. அவ்வபோது கால்நடைகள் மீது மோதுவதால் முன்பகுதி சிறிது சேதம் அடைந்தாலும், வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக நீண்ட தொலைவு செல்லும் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. படுத்து உறங்கும் வகையில் படுக்கை வசதிகளுடன் 200 ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அழைப்பு பிப்ரவரி 2023க்குள் விடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments