Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. 200 ரயில்கள் இலக்கு! – ரயில்வே ப்ளான்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (09:29 IST)
சமீபத்தில் அமர்ந்து செல்லும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து படுக்கை வசதி கொண்ட ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வரும் இந்த வந்தே பாரத் ரயில்கள் அமர்ந்தபடி செல்லும் இருக்கை வசதி கொண்டவை. அவ்வபோது கால்நடைகள் மீது மோதுவதால் முன்பகுதி சிறிது சேதம் அடைந்தாலும், வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்தக்கட்டமாக நீண்ட தொலைவு செல்லும் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. படுத்து உறங்கும் வகையில் படுக்கை வசதிகளுடன் 200 ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அழைப்பு பிப்ரவரி 2023க்குள் விடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments