Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

Prasanth Karthick
செவ்வாய், 6 மே 2025 (11:47 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லும் அணைகளை முழுவதுமாக மூடியது இந்தியா.

 

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது பல தடைகளை விதித்துள்ள இந்தியா, இங்கிருந்து பாகிஸ்தான் செல்லும் நீர்வழிகளை மூடுவதாக அறிவித்தது.

 

பாகிஸ்தானின் 90 சதவீத தண்ணீர் பயன்பாடு இந்தியாவிலிருந்து வரும் ஆறுகளை நம்பியே உள்ளதால், நதிநீர் ஒப்பந்த ரத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, நிதிநீரை நிறுத்தினால் போரை தொடங்குவோம் எனவும் மிரட்டல் விடுத்து வந்தது.

 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நதியில் அமைந்துள்ள பஹலிகார், சலால் என்ற இரு அணைகளையும் இந்திய அரசு மூடியுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் வழித்தடத்தின் குறுக்கே புதிய அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments