Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் மாநிலத்தில் வீசிய வெப்ப அலை.. 2 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்தால் அதிர்ச்சி..!

Heat

Siva

, வெள்ளி, 31 மே 2024 (09:38 IST)
பீகார் மாநிலத்தில் வெப்ப அலை வீசி வருவதை அடுத்து இரண்டு மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே பீகார் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது என்பதும் அவ்வப்போது வெப்ப அலை வீசி பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசு பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவிகள் வெப்ப அலை காரணமாக மயக்கம் போட்டு விழுந்தனர் என்பதும் இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பீகாரில் திடீரென வீசிய வெப்ப அலை காரணமாக இரண்டு மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து 16 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\

இதனை அடுத்து பீகார் மாநிலத்தில் வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெரு நாய்கள் கருணை கொலை செய்யப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா..!