Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா டாக்டரின் உடலில் 150 மி.கி. உயிரணுக்கள்: அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா டாக்டரின் உடலில் 150 மி.கி. உயிரணுக்கள்: அதிர்ச்சி தகவல்

Mahendran

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (17:28 IST)
கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் உடலில் 150 கிராம் உயிரணுக்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணி செய்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனையில் இறந்த மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டிருப்பதை அடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி மருத்துவரின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் இரண்டு காதுகள் உதடுகள் காயம் அடைந்ததாகவும் கழுத்தில் பற்களால் கடித்த அடையாளங்கள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பெண் மருத்துவர் மிகவும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம்.. உதயநிதி ரசிகர் கைது.. அண்ணாமலை கண்டனம்..!