Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனால் கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சுயபிரசவம் பார்த்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..

காதலனால் கர்ப்பம்.. யூடியூப் பார்த்து சுயபிரசவம் பார்த்த 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..
, திங்கள், 6 மார்ச் 2023 (14:17 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனால் கர்ப்பமான 15 வயது சிறுமி சுய பிரசவம் செய்ததால் ஏற்பட்ட விபரீதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒருவருடன் அடிக்கடி தனியாக உல்லாசமாக இருந்து உள்ளார். இதனை அடுத்து அவர் சில மாதங்களில் கர்ப்பமான நிலையில் கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார்.
 
இந்த நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடும் என்றும் அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் பிரசவ தினத்தன்று தனது அறையில் கதவை மூடிக்கொண்டு சுயமாகவே பிரசவம் பார்த்து கொண்டார். அவருக்கு குழந்தையும் பிறந்தது. 
 
இதனை அடுத்து குழந்தையை தன்னுடைய குடும்பத்தினர் பார்த்தால் அனைவருக்கும் உண்மை தெரிந்துவிடும்  என்பதால் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு ஒரு பெட்டியில் வைத்து பூட்டி உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் தாய்க்கு இந்த விஷயம் தெரிய வர அவர் அதிர்ச்சி அடைந்த உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் 
 
மருத்துவமனையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமியை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு 15 வயது சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரையும் தேடி வருகிறோம் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே இன்னலுக்கு காரணம்: வட மாநில தொழிலாளர் குறித்து பீகார் அரசியல்வாதி..!