Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவா? வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு..!

Mahendran
செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:45 IST)
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், ஹேமந்த் சோரனின் வீடு, ராஜ் பவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 
 சட்டவிரோத பணம் பரிமாற்று வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கு அமலாக்க துறையினர் விசாரணை நடத்த சென்றனர். அப்போது முதல்வர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் இரவு வரை காத்திருந்தனர்.  இந்த நிலையில் இரவு முழுவதும் முதல்வர் வீட்டுக்கு வராததால் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து  ஹேமந்த் சோரன் வீடு மற்றும் ராஜபவனை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில்  14 பேர் இதுவரை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகாததால் எட்டாவது முறை சம்மன் அளிக்கப்பட்டது  ’
 
கடந்த 20ஆம் தேதி ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்க துறையினர் விசாரணை நடத்திய நிலையில் நேற்று மீண்டும் விசாரணை நடத்த சென்றபோதுதான் அவர் வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments