Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நச்சுத்தன்மை வாய்ந்த குடிநீர் குடித்த 14 பேர் பலி

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (11:42 IST)
மகாராஷ்டரா மாநிலத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த குடிநீரை குடித்து 14 பேர் பலியாகி உள்ளதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள யவத்மால் கிராம மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள ஆழ்துளை போர்வெல் பைப்பில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பைப்பில் வரும் தண்ணீரில் நச்சுத்தன்மை உள்ளதால் இதை குடித்த மக்கள் 14 பேர் பலியாகியுள்ளனர், 38 பேர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் போராடி கொண்டிருக்கின்றனர். மேலும், 110க்கும் மேற்பட்டோர் சிறுநீரகம் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அந்த தண்ணீர் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்ததாவது, அந்த கிராம மக்கள் குடித்த தண்ணீரில் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரேட் கலந்துள்ளதால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக பல முறை அந்த கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments