Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளைஞருடன் கள்ளத்தொடர்பு: நிர்வாணமாக கட்டி வைத்து அடித்த கணவர்

இளைஞருடன் கள்ளத்தொடர்பு: நிர்வாணமாக கட்டி வைத்து அடித்த கணவர்
, சனி, 25 ஜூன் 2016 (13:01 IST)
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள கசோட்டியா என்ற கிராமத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு இளைஞர் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் அவர்கள் இருவரையும் மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து அடித்துள்ளார்.


 
 
திருமணமான அந்த பெண்ணும் இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஓடிப்போய் சேர்ந்து வாழ முடிவெடுத்ததை தடுத்த அந்த பெண்ணின் கணவர் அவர்கள் இருவரையும் ஊரில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தார்.
 
பெண்ணின் கணவருடன் கிராம மக்களும் சேர்ந்து அவர்கள் இருவரின் உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களாக அவர்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
 
பின்னர் அந்த இளைஞரின் வீட்டில் உள்ளவர்கள் வந்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து இளைஞரை மீட்டு சென்றுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டனர்.
 
இந்நிலையில் காதல் ஜோடிகள் நிர்வாணமாக கட்டி வைத்து அடிக்கப்பட்ட புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த மனித தன்மையற்ற செயலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
தற்போது வரை இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் காவலர்கள் குவிக்கப்பட்டு, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இனி நான் பேச மாட்டேன்’ - சர்ச்சை நடிகர் அதிரடி முடிவு