Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Advertiesment
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!
, வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (19:53 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் தமிழகத்தை விட இரு மடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் இன்றும் அதே போல் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 4,031 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 என்றும் அம்மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்றோர்களின் எண்ணிக்கை 1,07,315 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,24,509என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,03,985 என்றும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,190 என்றும் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதால் விரைவில் லாக்டவுன் உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுடன் ஒத்துழைப்போம்: விவேக்கிற்கு வாழ்த்து கூறி டுவிட் பதிவு செய்த கமல்