Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 மாணவிகள் கற்பழிப்பு; 3 பேர் கர்ப்பம்: அரசு பள்ளி விடுதியில் அட்டூழியம்!

12 மாணவிகள் கற்பழிப்பு; 3 பேர் கர்ப்பம்: அரசு பள்ளி விடுதியில் அட்டூழியம்!

Advertiesment
12 மாணவிகள் கற்பழிப்பு; 3 பேர் கர்ப்பம்: அரசு பள்ளி விடுதியில் அட்டூழியம்!
, வெள்ளி, 4 நவம்பர் 2016 (11:56 IST)
மகாராஷ்டிராவில் அரசு பள்ளி விடுதி ஒன்றில் 12 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் 3 பேர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அம்மாநிலத்தின் புல்தானா மாவட்டம் காமகோன் தேசில் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மலைவாழ் மணவர்கள் படித்து அங்குள்ள விடுதியில் தங்கி வருகின்றனர்.
 
இங்கு பணி புரியும் துப்புரவு தொழிலாளி ஒருவர் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனையடுத்து அந்த பள்ளியில் 12 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதில் 3 பேர் கர்ப்பமாக இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மலைவாழ் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘என்.டி.டி.வி. இந்தியா’ சேனல் ஒளிபரப்புக்கு தடை - மோடி அரசு அதிரடி