Webdunia - Bharat's app for daily news and videos

Install App

117 வயதிலும் வருமான வரி கட்டும் மூதாட்டி – ஆச்சர்யத் தகவல்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (10:34 IST)
இந்தியாவிலேயே மிக அதிக வயதில் வருமான வரி கட்டும் பெண்ணாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற மூதாட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வருமான வரித்துறையின் 160 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் 100 வயதுக்கு மேல் வரி கட்டுபவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். அதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜா பாய் என்ற 117 வயது மூதாட்டி இந்தியாவில் மிக அதிகவயதில் வரி கட்டுபவராக தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தனது வைப்புத் தொகை மீதான வட்டி மற்றும் ஓய்வூதியத்தை தனது வருமானமாக காட்டி அதற்காக வரி கட்டியுள்ளார். இவரைத் தவிர 100 வயதுக்கு மேற்பட்ட மேலும் இரு மூதாட்டிகளும் இதுபோல கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments