Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

Advertiesment
Night party

Siva

, ஞாயிறு, 2 நவம்பர் 2025 (12:17 IST)
பெங்களூருவுக்கு அருகில் உள்ள இராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் உள்ள ஒரு ரெசார்ட்டில், நேற்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், இரவு முழுவதும் நடைபெற்ற 'ரேவ் பார்ட்டி' வெளிச்சத்துக்கு வந்தது.
 
இந்த போதை விருந்தில் கலந்துகொண்ட 115 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 35 இளம்பெண்கள் மற்றும் 3 சிறார்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள்.
 
கைது செய்யப்பட்ட அனைவரும் மது அருந்தி போதையில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரெசார்ட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை