Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!

Advertiesment
அடுத்தது 100 ரூபாய்க்கும் ஆப்பு?: புதிய 100, 150, 20 ரூபாய் நாணயம் தயார்!
, புதன், 9 நவம்பர் 2016 (11:13 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.


 
 
தற்போது கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது செலவுக்கு கையில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கையில் உள்ள 500, 1000 ரூபாய்க்களை மக்கள் 100 ரூபாயாக மாற்றுவதால் தற்போது 100 ரூபாய் நோட்டு தான் அதிகபட்ச பணமாக உள்ளது. இந்நிலையில்  அடுத்ததாக 100 ரூபயையும் அரசு செல்லாது என அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
100 ரூபாய் நோட்டுகளை முடக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய 100, 150, 20 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மக்கள் கையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் ஓரளவுக்கு வந்த பிறகு அடுத்த வருட தொடக்கத்தில் 100 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.டி.எம்-ல் எப்போது பணம் எடுக்கலாம்? - புதிய அறிவிப்பு