Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் விபத்து - 10 பேர் பலி

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (14:58 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் இன்று 15 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதனால் இந்த ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக ஆலையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போதிய பாதுகாப்பின்றி ஆலை நடத்தப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments