பட்டாசு ஆலையில் விபத்து - 10 பேர் பலி

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (14:58 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் இன்று 15 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதனால் இந்த ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக ஆலையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போதிய பாதுகாப்பின்றி ஆலை நடத்தப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments