Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு ஆலையில் விபத்து - 10 பேர் பலி

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (14:58 IST)
தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
 
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் இன்று 15 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மின்கசிவு காரணமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
 
இதனால் இந்த ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக ஆலையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போதிய பாதுகாப்பின்றி ஆலை நடத்தப்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments