Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலுக்கு 10 எலக்ட்ரிக் பஸ்களை காணிக்கை அளித்த நிறுவனம்..!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2023 (07:48 IST)
திருப்பதி கோயிலில் காற்றின் மாசு கெடக்கூடாது என்பதற்காக 10 எலக்ட்ரிக் பேருந்துகளை ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காணிக்கையாக வழங்கியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் நிறுவனம் 10 எலக்ட்ரிக் பஸ்களை திருப்பதி திருமலை தேவஸ்தானம் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது. ஒரு பேருந்தின் மதிப்பு 1.8 கோடி என்ற இயன்ற விதத்தில் இந்த 10 பேருந்துகளின் மதிப்பு 18 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரி சுப்பா ரெட்டி கூறிய போது திருமலையில் காற்றில் மாசு படிவதை தடுப்பதற்காக இந்த பேருந்துகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். அதேபோல் பிளாஸ்டிக்கை தடை செய்துள்ளோம் என்றும் லட்டு பிரசாதங்களை கூட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளை தந்து கொண்டிருக்கின்றோம் என்றும் 35 பேட்டரி கார்களை தேவஸ்தான அதிகாரிக்கு வழங்கியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும். காணிக்கையாக வழங்கப்பட்ட எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்தும் திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ICU-வில் ரஜினிகாந்த்? ஆஞ்சியோ சிகிச்சை..! - தற்போது எப்படி இருக்கிறார்?

நிா்மலா சீதாராமன் மீதான தோ்தல் பத்திர வழக்கு: விசாரிக்க இடைக்காலத் தடை

நேற்றைய சரிவில் இருந்து மீளாமல் மீண்டும் சரியும் பங்குச்சந்தை: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. சென்னையில் இன்று சவரன் எவ்வளவு?

லெபனானை தரை வழியாக தாக்கத் தொடங்கிய இஸ்ரேல்! - 1000 பேர் பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments