Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் முதல்வர்

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு: அதிர்ச்சியில் முதல்வர்
, புதன், 22 ஜூலை 2020 (19:21 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் இன்று மட்டும் கேரளாவில் 1,038 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டு இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி கேரள மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கேரளாவில் 1,038  பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கேரள கேரள முதல்வர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.  குறிப்பாக அதிகபட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 226 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். மேலும் கேரளாவில் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,818 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
தமிழகம் உட்பட இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்றாலும் இன்றைய அதிகபட்ச பாதிப்பு காரணமாக முதல்வர் பினராயி விஜயன் அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் ஒரே நாளில் 6,045 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்