ரூ.35 லட்சம் மோசடி: வாடகைத் தாய் குழந்தை டிஎன்ஏ பொருந்தவில்லை - மருத்துவர் உட்பட 10 பேர் கைது!

Siva
திங்கள், 28 ஜூலை 2025 (10:00 IST)
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ரூ.35 லட்சம் செலுத்தி வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையின் டிஎன்ஏ தங்கள் டிஎன்ஏவுடன் பொருந்தவில்லை என புகார் அளித்ததையடுத்து, டாக்டர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தத் தம்பதியினர் ஐதராபாத் டாக்டர் ஒருவரை தொடர்புகொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்து ரூ.35 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், டாக்டர் வாடகைத்தாயை ஏற்பாடு செய்து, குழந்தை நல்லபடியாக பிறந்ததாக கூறி குழந்தையை தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார்.
 
தம்பதியினர் குழந்தையின் டிஎன்ஏ-வை பரிசோதித்தபோது, அது தங்கள் டிஎன்ஏவுக்கு சற்றும் பொருந்தாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி டாக்டர் மீது தம்பதியினர் புகார் அளித்தனர்.
 
இந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தம்பதியர் கொடுத்த விந்தணுவை வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தாமல், வேறொரு குழந்தையை டாக்டர் கொடுத்து ஏமாற்றியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலில் மேலும் சில சட்டவிரோத குழுக்கள் இருக்கலாம் என்று கூறப்படுவதால், காவல்துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை: மத்திய அரசு பரிசீலனை

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு நடத்தியவர் எந்த நாட்டு தீவிரவாதி? FBI கண்டுபிடித்த உண்மை..!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...

இந்திய பங்குச்சந்தை இரண்டாவது நாளாக உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலையில் இன்று லேசான சரிவு.. ஆனாலும் ரூ.94000க்கும் மேல் ஒரு சவரன் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments