Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் 30 வரை ரயில்கள் ரத்து என்பது தவறான தகவல்: ரயில்வே துறை விளக்கம்

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் உள்பட எந்த போக்குவரத்தும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்டு 31 வரை ரயில் போக்குவரத்து இல்லை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் ஒருசில ஊடகங்களில் செப்டம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரயில்வே துறை செப்டம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து தடை என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் ரயில்வே துறை இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து செப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments