Publish Date: Mon, 12 Jul 2021 (14:27 IST)
Updated Date: Mon, 12 Jul 2021 (14:31 IST)
பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் மிகப்பெரிய அளவில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருதையும் வாங்கினார். தான் மறைந்தாலும் தன் பாலின் மூலமாக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நா முத்துக்குமாரின் 46 வது பிறந்தநாள் இன்று அவரின் நினைவாக ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் அவரின் பாடலும் மூலமாகவே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.