Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:15 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை 140 புள்ளிகள் சரிந்து 74,089 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் குறைந்து 22,475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை இன்று சரிந்தாலும் பெரிய அளவில் சரியில்லை என்பதும் கிட்டத்தட்ட 100 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் வரை பங்குச்சந்தை மந்தமாகவே தான் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் தேர்தலுக்குப் பின் புதிய நிறுவனங்களில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி மற்றும் கரூர் வைசியா வங்கி ஆகிய  பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments