Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை.. தேர்தல் வரை இப்படித்தான் இருக்குமா?

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (09:59 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றம் இறக்கமின்றி இருந்து வரும் நிலையில் இன்றும் மிகவும் குறைவான சரிவுடன் தான் பங்குச்சந்தை வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 50 புள்ளிகள் மட்டுமே சரிந்து 73,826 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 30 புள்ளிகள் மட்டுமே குறைந்து 22,400 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பெரிய அளவில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் இந்த நேரத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், பேங்க் பீஸ் , கோல்ட் பீஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை ஏற்றத்திலும் சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய பங்குகள் சரிவிலும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments