Publish Date: Mon, 06 Nov 2023 (09:45 IST)
Updated Date: Mon, 06 Nov 2023 (09:47 IST)
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக பங்கு சந்தை மிகவும் சரிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை உயர்ந்துள்ளது என்றும் 350 பள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 355 புள்ளிகள் உயர்ந்து 64,718 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 19 ஆயிரத்து 339 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் இனி வரும் நாட்களில் பங்கு சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்