Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம்!

Share Market
, செவ்வாய், 6 டிசம்பர் 2022 (09:33 IST)
நேற்று இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 300 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 520 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 90 புள்ளிகள் சரிந்து 18610 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று காலை பங்குச் சந்தை சரிந்தாலும் மாலை ஓரளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து இன்றும் அதேபோல் மாலையில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் நீண்டகால முதலீட்டை பொருத்த வரை பங்குச்சந்தை மிகச்சிறந்த முதலீடு என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் மற்றும் கொள்கையை
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்