Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டிற்கு பின் 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (10:02 IST)
பொதுவாக பட்ஜெட் தினத்தில் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோதிலும் பங்குச்சந்தை குறைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு மறுநாள் ஆன இன்றும் பங்குச்சந்தை சரிவில் தான் வர்த்தகம் தொடங்கி இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 72 புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 19 புள்ளிகள் சார்ந்து 24 ஆயிரத்து 460 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளன. அதேபோல் ஆசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி,  ஐடிசி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பட்ஜெட்டுக்குப்பின் பெரிய அளவில் பங்குச்சந்தை சரியவில்லை என்றாலும் இன்னும் ஒரு சில நாட்களில் பங்குச்சந்தை உயரும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments