Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. 75 ஆயிரத்தை தாண்டிய சென்செக்ஸ்..!

Siva
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:11 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 310 புள்ளிகள் அதிகரித்து 75052 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 22751 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் தேர்தல் வரை பங்கு சந்தை நிதானமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிடல், சிப்லா, ஐடிசி , மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கல்யாண் ஜூவல்லர்ஸ். கரூர் வைசியா வங்கி. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments