Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

Siva
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (09:50 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு காரணமாக, இந்திய பங்குச்சந்தை உட்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிந்தது என்பதும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஆனால் அந்த நிலைமைகள் சில நாட்களே நீடித்தன. கடந்த வாரம் பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி பெற்ற நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளிலேயே சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் டிரம்பின் அறிவிப்பால் பங்குச்சந்தையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை 1,540 புள்ளிகள் உயர்ந்து, 76,695 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 475 புள்ளிகள் உயர்ந்து, 23,300 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், இந்துஸ்தான் லீவர், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி போன்ற சில பங்குகள் மட்டும் குறைந்துள்ளன. மற்ற அனைத்து பங்குகளும் உயர்வைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, நிப்டியில் உள்ள 50 பங்குகளில் 47 பங்குகள் உயர்வடைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments