Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன? நிப்டி, சென்செக்ஸ் அப்டேட்..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (11:43 IST)
நேற்று பங்குச்சந்தை உச்சத்துக்கு சென்றது என்பதும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்ற நிலையில் இன்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் ஆகி வருகிறது.
 
குறிப்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 28 புள்ளிகள் மட்டும் குறைந்து 76,074 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி வெறும் 7 புள்ளிகள் மட்டும் குறைந்து 23,321 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம், ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, எஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகின்றன.
 
அதேபோல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், HCL டெக்னாலஜி, HDFC வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ICICI வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments