Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

Siva
திங்கள், 25 நவம்பர் 2024 (09:56 IST)
கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மிகப்பெரிய நஷ்டம் ஈடு கட்டப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 1100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதானி  மீது அமெரிக்கா அரசு சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக பங்குச்சந்தை மிக மோசமாக கடந்த வாரம் சரிந்த நிலையில், அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் வெள்ளிக்கிழமையும் இன்றும் பங்குச்சந்தை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், 1120 புள்ளிகளை உயர்ந்து 80,227 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 360 புள்ளிகள் உயர்ந்து 24,207 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், ஹெச்.சி.எல். டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி உள்பட சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments