Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய விடுமுறைக்கு பின் இன்று பங்குச்சந்தையின் நிலவரம் என்ன?

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (09:32 IST)
நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் பங்குச்சந்தை சரிவில் இருப்பதாக கூறப்படுவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்றும் கடந்த செவ்வாய்கிழமை ஓரளவு பங்குச்சந்தை உயர்ந்ததால் நஷ்டம் சிறிதளவு ஈடு கட்டப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களில் சரிவை சந்தித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 537 புள்ளிகள் குறைந்து 77,020 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் நிஃப்டி 23,322 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் HCL டெக்னாலஜி, HDFC வங்கி, இன்போசிஸ், TCS போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments