Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை பெரும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 4 நவம்பர் 2024 (09:23 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்து, அதற்கு முந்தைய வாரம் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டிய நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் பங்குச்சந்தை பெரும் அளவில் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில், 600 புள்ளிகள் சரிந்து 79,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 193 புள்ளிகள் சரிந்து 24,090 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளன. அதேபோல், HCL டெக்னாலஜி, IndusInd வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சரிந்தாலும், வரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அமெரிக்காவின் பெடரல் வங்கியின்  வட்டி விகிதம் குறித்து அறிவிப்பு வெளியானால், அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments