Publish Date: Wed, 13 Sep 2023 (10:54 IST)
Updated Date: Wed, 13 Sep 2023 (10:55 IST)
பங்குச்சந்தை நேற்று சரிந்தகால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் சரிந்துள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 39 புள்ளிகள் குறைந்து 67779 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. .
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 11 புள்ளிகள் குறைந்து 19983 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச்சந்தை இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திருந்தாலும் இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.