சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து முடிந்த வர்த்தகம்!!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (17:51 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருக்கும் நிலையில் அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 949 புள்ளிகள் சரிந்து 56,747 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளுடன் விலை குறைந்து வர்த்தகமாகியது. 
 
இண்டஸ் இண்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ், ஏர்டெல், எச்சிஎல் டெக், டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், மாருதி சுசூகி, என்.டி.பி.சி., சன் பார்மா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. 
 
இதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 248 புள்ளிகள் சரிந்து 16,912 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனர்களில் யுபிஎல் பங்கைத் தவிர 49 நிறுவனப் பங்குகளும் விலை குறைந்து முடிந்துள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக அதிமுக பக்கம் போயிருச்சு, தேமுதிகவும் திமுக பக்கம் போக போவுது.. விஜய் கட்சியில் யார் தான் கூட்டணி?

அதிமுக பக்கம் அன்புமணி போனதால், திமுகவை நோக்கி செல்லும் ராமதாஸ்.. விரைவில் ஒப்பந்தம்?

ஓபிஎஸ், டிடிவி எல்லாரும் என்.டி.ஏ கூட்டணிக்கு வரணும்!. அமித்ஷா போட்ட கண்டிஷன்!...

இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்தது வெள்ளி.. தங்கம் விலையும் உச்சம்..!

ராமதாஸை சேர்க்கக்கூடாது!.. கண்டிஷன் போட்டு கூட்டணி வைத்த அன்புமணி?...

அடுத்த கட்டுரையில்
Show comments