Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20வது நாளாக ஏறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

20வது நாளாக ஏறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (08:43 IST)
தொடர்ந்து 19 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து 19 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று 20 வது நாளாக பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 102.49 என்ற விலையில் டீசல் விலை ரூபாய் 94.19 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி