Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விகிதங்கள்: எகிறியடிக்கும் பங்கு சந்தை!

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (12:44 IST)
இன்று நடைபெற்று வரும் ஜி.எஸ்.டி கவுன்சிலில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பங்கு சந்தை புள்ளிகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

இன்று கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் ஜி.எஸ்.டி வரி விதிப்பால பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. முக்கியமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியதோடு, உற்பத்தியையும் குறைத்துள்ளன.

இதனால் இன்றைய ஜி.எஸ்.டி கூட்டத்தில் வரிக்குறைப்பு பற்றி புதிய அறிவிப்புகள் வெளியாகும் என ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக வரி விதிப்பில் மாற்றங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், காலையில் சுணக்கத்துடன் தொடங்கிய பங்குசந்தை புள்ளிகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன.

தேசிய பங்கு சந்தை புள்ளியான நிஃப்டி 460 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் உயர்ந்துள்ளது. இது உள்நாட்டு நிறுவனங்களுக்கு சற்று ஆசுவாசம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments