Publish Date: Fri, 21 Oct 2022 (10:21 IST)
Updated Date: Fri, 21 Oct 2022 (10:22 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று சென்செக்ஸ் மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 275 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று அல்லது வரும் திங்கட்கிழமை சென்செக்ஸ் 60 ஆயிரம் என்ற புள்ளியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 176630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது