காலை எகிறிய சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிவு!

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:03 IST)
காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிந்தது. 

 
நேற்று பங்குத்தந்தை 1,300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் விழுந்ததால் ஏராளமான கோடி முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் ஓரளவு உயர்ந்தது. இன்று பங்கு சந்தை தொடங்கிய உடன் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 56 ஆயிரத்து இருநூறு என்ற புள்ளியில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 160 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16856 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் இன்று பங்கு சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது என்றும், அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், காலை நேர வர்த்தகத்தில் 990 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் கிடுகிடுவென சரிந்தது. 
 
காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 998 புள்ளிகள் அதிகரித்து 56,567 புள்ளிகளை தொட்டு இருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு மேல் சரிய தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 புள்ளிகள் குறைந்து 55,630 புள்ளிகளானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறாரா? திடீரென தவெகவினர் போட்ட தீர்மானம்..!

மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பா? முதல்வர் தீவிர ஆலோசனை..

15 பில்லியன் டாலர் செலவில் இந்தியா அமெரிக்காவை இணைக்கும் கூகுள்.. டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும் இந்தியா..!

நாளை திருமணம்.. இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்.. என்ன நடந்தது?

ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..

அடுத்த கட்டுரையில்
Show comments