Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2025 (09:33 IST)
வாரத்தின் முதல் நாளான நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்த இந்திய பங்குச்சந்தை, இன்றும் தொடர்ந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்ந்து 81,460 என்ற அளவில் வர்த்தகமானது. அதேபோல், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 24,911 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
 
இன்றைய வர்த்தகத்தில், பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதில், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, எல்&டி, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ் மற்றும் டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைத் தேடித் தந்துள்ளது.
 
அதேநேரம், சில பங்குகள் சற்று சரிவைக் கண்டன. ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, மாருதி, ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் சன் பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வர்த்தகமாயின. 
ஒட்டுமொத்தமாக, சந்தை நேர்மறையான போக்கிலேயே நீடிப்பதால், முதலீட்டாளர்கள் சந்தையின் எதிர்கால வளர்ச்சி குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments