Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 நாள் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

Advertiesment
share

Siva

, வியாழன், 29 மே 2025 (09:33 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். இந்த வாரம் திங்கட்கிழமை பங்குச் சந்தை உயர்ந்த நிலையில், இரண்டு நாள் கழித்து இன்று மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலவரத்தை பார்ப்போம்.
 
இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து, 81,524 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து, 24,824 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்ட்ரியல் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதே போல், அப்பல்லோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஜியோ பைனான்ஸ், மாருதி, ஸ்ரீராம் பைனான்ஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று கூட 2 லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் கைது.. திருந்தாத பாகிஸ்தான்..!