Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் பதட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை.. மீண்டும் உச்சம் செல்லும் இந்திய பங்குச்சந்தை..

Siva
வெள்ளி, 2 மே 2025 (10:20 IST)
இந்தியா-பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக இந்திய பங்குச் சந்தை சரிய வாய்ப்பு இருப்பதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலைமைக்கு மத்தியில் போர் பதட்டம் தொடர்ந்து இருந்தாலும், பங்குச் சந்தை மீண்டும் உச்சத்தை எட்டிக்கொண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று கிட்டத்தட்ட 900 புள்ளிகள் உயர்ந்து 81,104 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 240 புள்ளிகள் உயர்ந்து 24,626 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஏஷியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், சிப்லா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே இன்று சரிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments