Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

Siva
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:04 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு காரணமாக, இன்று பிளாக் மண்டே என மாற வாய்ப்பு இருப்பதாகவும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரியலாம் என்றும் கூறப்பட்டது.
 
அது உண்மை எனும் வகையில், இந்திய பங்குச்சந்தை சுமார் 3,000 புள்ளிகள் வரை சரிந்து, சென்செக்ஸ் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 2,765 புள்ளிகள் சரிந்து, 72,710 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 900 புள்ளிகள் 22,000 அளவில் வர்த்தகம் செய்கிறது.
 
சமீப காலமாக இவ்வளவு அதிகமாக இந்திய பங்குச்சந்தை சரிந்ததில்லை. இருப்பினும், இது நிரந்தர சரிவல்ல; விரைவில் மீண்டும் உயரும் என நம்பிக்கை இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளுமே மிக மோசமாக சரிந்துள்ளன.  சில முக்கிய  நிறுவனங்கள் 5% முதல் 6% வரை சரிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments