Publish Date: Mon, 19 Apr 2021 (09:44 IST)
Updated Date: Mon, 19 Apr 2021 (12:46 IST)
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி என தகவல்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி என தகவல்.
ஆம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,431 புள்ளிகள் சரிந்து 47.400 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 403 புள்ளிகள் சரிந்து 14,214 புள்ளிகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.