Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை ஏற்றுமதி வீழ்ச்சி – வணிகர்கள் வருத்தம் !

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2019 (11:37 IST)
இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8.5 சதவிகிதம் குறைந்துள்ளது.

இந்தியா, தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்து அதை நகை மற்றும் இன்னப் பிற உப்யோகப் பொருட்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக தங்க நாணயங்கள், வெள்ளி நகை மற்றும் பதக்கங்கள் ஏற்றுமதியில் கடுமையானப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னடைவால் இன்னபிற நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவரங்களை நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்டுள்ளது. கடந்த ஏபரல் முதல் டிசம்பர் வரையிலான 8 மாதங்களில் மொத்தம் 22.41 பில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2017 ஆம் ஆண்டை விட 8.5 சதவீதம் குறைவாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதி 24.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments