Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி முதல் மீண்டும் விற்பனை… ஹார்லி டேவிட்ஸன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:18 IST)
இந்தியாவில் மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் கடந்த 111 ஆண்டுகளாக தனது பைக்குகளை விற்று வருகிறது. இந்த நிறுவனத்திற்காக ஹரியானாவில் ஒரு தொழிற்சாலை மட்டுமே இந்தியாவில் இயங்கி வருகிறது. ஹார்லி டேவிட்சனின் மாடல் பைக்குகள் இன்றும் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் பைக்காக இருந்து வருகிறது. ஆனால் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. எதிர்பார்த்த அளவு இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை இல்லாததால், இந்த முடிவை எடுத்ததாக ஹார்லி டேவிட்சன் அறிவித்தது. 

இந்நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையை மீண்டும் துவங்குவதற்கு ஹார்லி டேவிட்சன் இப்போது அறிவித்துள்ளது. இதையடுத்து விற்பனை ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வர்த்தக செயல்பாடுகள் முழு வீச்சில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹார்லி டேவிட்சன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments