Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் ரூ.40 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.. பறக்கும் படையினர் அதிரடி..!

Mahendran
சனி, 4 மே 2024 (10:54 IST)
இன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் ரூ.40 கோடி மதிப்புள்ள தங்கம் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
பித்தாபுரம் தொகுதியில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் தெரிகிறது. இருப்பினும் தங்கம் யாருடையது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதே வாகனத்தில் கடந்த மாதம் 13ம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திச் சென்று பிடிபட்ட நிலையில், மீண்டும் அதே வாகனத்தில் ரூ.17 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
அதேபோல் தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை, சைபராபாத் சிறப்பு தனிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 34.78 கிலோ தங்க நகைகள், 43.60 கிலோ வெள்ளி நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 
இந்த இரு சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments