Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
செவ்வாய், 6 மே 2025 (16:24 IST)
சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் இருமுறை உயர்ந்தது, பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்க விலை, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ.9,025-க்கு விற்கப்பட்டது. ஆனால் மாலை வர்த்தக முடிவில், அதே கிராம் தங்கம் ரூ.9,100-க்கு உயர்ந்தது.
 
அதேபோல், ஒரு சவரன் தங்கம் காலை ரூ.72,200-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் அது ரூ.72,800 ஆக உயர்ந்தது. நேற்று இதே தங்கம் ஒரு கிராம் ரூ.8,900, சவரன் ரூ.71,200 ஆக இருந்தது. இதன் அடிப்படையில், இன்று மட்டும் சவரன் விலை ரூ.2,600 வரை உயர்ந்துள்ளது.
 
இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வும், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழ்நிலையும் குறிப்பிடப்படுகின்றன.
 
இதனால், ஆபரண தங்கத்திற்கும் அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. வரும் நாட்களில் விலை குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன என்று தங்க நகை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தங்கம் விலை இவ்வாறு நாளுக்கு நாள் உயர்வது, பொதுமக்கள் மத்தியில் கவலையும் குழப்பமும் ஏற்படுத்தி வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

கடலுக்கு அடியில் அதிநவீன ஆயுத சோதனை.. இந்திய கடற்படை சாதனை..!

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவபழை: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments