ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 2 ஆகஸ்ட் 2025 (11:12 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 அதிகரித்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
கடந்த வாரம், தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் ரூ. 75,040-க்கு விற்பனையானது. அதன்பிறகு விலை படிப்படியாக குறைந்து வந்தது. வியாழன் அன்று ரூ. 320-ம், வெள்ளிக்கிழமை ரூ. 160-ம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
ஆனால், வாரத்தின் இறுதி நாளான இன்று, விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120 அதிகரித்து, ரூ. 74,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 140 உயர்ந்து, ரூ. 9,290-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.123 என்றும் ஒரு கிலோ ரூ.1,23,000 என்றே விற்பனையாகி வருகிறது.
 
இந்த திடீர் விலை உயர்வு, தங்க நகைகள் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments