Publish Date: Mon, 20 Apr 2015 (10:47 IST)
Updated Date: Mon, 20 Apr 2015 (10:49 IST)
எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை பாதியாக நறுக்கி நீரில் போட்டுவிட்டு பின்னர் நறுக்குங்கள். அழுகை குறையும்.
கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு இட்லி விருப்பமுடன் சாப்பிடத் தோன்றும்.