அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக டிரம்பால் நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இவர்?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (09:40 IST)
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழர்

அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்கவாழ் இந்தியரான சுதர்சனம் பாபுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமன செய்தார் என்கிறது தினமணியின் செய்தி.

மதிப்புமிக்க ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தை சேர்ந்த சுதர்சனம் பாபுவை தேசிய அறிவியல் வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக 6 ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

சுதர்சனம் பாபு 1988ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள ஐஐடியில் தனது எம்.டெக் படிப்பையும், இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை 1986ஆம் ஆண்டு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் உலோகவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது இடைநிலை ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி கல்விக்கான மையத்தின் இயக்குநராகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வத்தின் ஆளுநரின் மேம்பட்ட உற்பத்தித் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இந்த மதிப்புமிக்க குழுவில் மூன்றாவது அமெரிக்கவாழ் இந்தியராக சுதர்சனம் பாபு நியமிக்கப்பட்டுள்ளார் என்று விவரிக்கிற

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரிய போர்க்கப்பல் ஆன் தி வே!.. சரண்டர் ஆகுங்க!. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!...

நானும் விஜயும் ஒன்னா?!.. நான் யார் தெரியுமா?!.. சரத்குமார் ஆவேசம்!...

அதிமுக - பாஜக ஆட்சி அமைந்தால் தமிழ்நாடு நாசமாகி போகும்!.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்!..

ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்று உடலை வீசிய கும்பல்!.. சென்னையில் அதிர்ச்சி...

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா!. 4 பேர் பலி!...

அடுத்த கட்டுரையில்
Show comments