Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல், சோனியா முன்னிலை – காங்கிரஸ் உற்சாகம் !

Webdunia
வியாழன், 23 மே 2019 (08:23 IST)
காங்கிரஸ்  கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் நடந்து வருகின்றன. இதில் காலை 7.30 மணிக்கு முகவர்கள் தீவிர சோதனைகளுக்குப் பிறகு மையங்களுக்குள் அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான அமேதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ராகுல் முன்னிலைப் பெற்று வருகிறார். அதேப் போல ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார்.

மதுரா தொகுதியில் போட்டியிட்ட மேனகா காந்தியும் முன்னிலைப் பெற்றுள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்